விஸ்வ ஹிந்து பரிஷத் மதுக்கரை பிரகண்ட கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

மதுக்கரையில் நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் கூட்டத்தில் திருப்பதி தேவஸ்தானம் மற்றும் செட்டிபாளையம் ஜெபக்கூடம் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில மற்றும் மத்திய அரசுகளிடம் நடவடிக்கை கோரப்பட்டது.


Coimbatore: விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மதுக்கரை பிரகண்ட கூட்டம் இன்று காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்தில் பிரகண்ட தலைவர் C.V. பழனிசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாநில சமுதாய நல்லிணக்க பொறுப்பாளர் முனைவர் சாரதா, அமர்நாத் சிவலிங்கம், மாநிலத் துணைத் தலைவர் C.N. பரமசிவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



முதல் தீர்மானத்தில், திருப்பதி தேவஸ்தானத்தில் லட்டு பிரசாதத்தில் மாமிசக் கொழுப்பு கலந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்தனர். இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இரண்டாவது தீர்மானத்தில், கோவை செட்டிபாளையம் ஜெயம் நகரில் அனுமதியின்றி செயல்படும் கிறிஸ்தவ ஜெபக்கூடத்தின் மீது மாநில அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.



கூட்டத்தின் நிறைவில், பிரகண்ட செயலாளர் ராஜேஷ்குமார் மகிழ்வுரையாற்றினார். இக்கூட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...