கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை காரமடை பகுதியில் 6 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மதுரையைச் சேர்ந்த பழனி மணி மீது, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.


கோவை: கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி 6 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த மதுரையைச் சேர்ந்த பழனி மணி என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடிக்கு பரிந்துரைத்தார்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவின் பேரில் பழனி மணி மீது இன்று (செப்டம்பர் 23) குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பழனி மணி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...