கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை காரமடை பகுதியில் 6 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மதுரையைச் சேர்ந்த பழனி மணி மீது, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.


கோவை: கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி 6 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த மதுரையைச் சேர்ந்த பழனி மணி என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடிக்கு பரிந்துரைத்தார்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவின் பேரில் பழனி மணி மீது இன்று (செப்டம்பர் 23) குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பழனி மணி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...