ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இருதய ஆரோக்கிய கண்காட்சி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை புரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இருதய ஆரோக்கியம் குறித்த மாபெரும் கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கண்காட்சியை துவக்கி வைத்தார்.



கோவை: கோவை புரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இருதய ஆரோக்கியம் குறித்த மாபெரும் கண்காட்சி இன்று துவங்கியது. இளம் தலைமுறையினருக்கு இருதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



SNR சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன் ஆகியோர் முன்னிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இந்த கண்காட்சியை துவங்கி வைத்து பார்வையிட்டார்.



மருத்துவமனையின் இருதயவியல் மற்றும் இருதய அறுவை சிகிச்சை துறையின் மருத்துவர்கள் கண்காட்சியை வழிநடத்தினர்.



நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், நோயில்லா வாழ்விற்கு சரியான உணவு பழக்கமும் உடற்பயிற்சியும் அவசியம் என்றும், அரசு சார்பில் சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், அரசு விழாக்களில் அங்கன்வாடி சார்பில் அரங்கம் அமைக்கப்பட்டு ஆரோக்கியமான வாழ்விற்கு தேவையானவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.



இக்கண்காட்சியில், பார்வையாளர்களுக்கு இருதய செயல்பாடு மற்றும் இருதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் மாதிரி இருதயத்தின் உடற்கூறியல் இடம்பெற்றிருந்தது. மேலும் இதயத்தில் ஸ்டென்ட் எவ்வாறு பொருத்தப்படுகின்றன, இதயத்தில் உள்ள அடைப்புகளுக்கு எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகின்றன என்பது குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. பேஸ்மேக்கர் குறித்த காட்சியும் இடம் பெற்றிருந்தது. இந்த உயிர்க்காக்கும் கருவிகள் எவ்வாறு உடலில் பொருத்தப்பட்டு செயல்படுகின்றன என்பது குறித்தும் சீரற்ற இதய துடிப்புகளை இக்கருவிகள் மூலம் சீராக வைத்திருப்பது குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.

குழந்தைகளுக்கான இருதயவியல், சிறப்பு இருதய அறுவை சிகிச்சைகள் மற்றும் எலெக்ட்ரோபிசியாலஜி, லேசர் கரோனரி ஆன்ஜியோபிளாஸ்ட்டி குறித்த புதிய முன்னேற்றங்கள் பற்றிய விவரங்களும் காணொளிகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டது.



கண்காட்சியில் நேரடியாக சிபிஆர் (CPR) செயல்விளக்கம் பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர்கள், இருதய நோய்களைத் தவிர்க்க உதவும் ஆரோக்கியமான உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் பற்றிய முக்கிய குறிப்புகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.



இக்கண்காட்சி செப்டம்பர் 22 வரை நடைபெறும் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...