ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இருதய ஆரோக்கிய கண்காட்சி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை புரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இருதய ஆரோக்கியம் குறித்த மாபெரும் கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கண்காட்சியை துவக்கி வைத்தார்.



கோவை: கோவை புரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இருதய ஆரோக்கியம் குறித்த மாபெரும் கண்காட்சி இன்று துவங்கியது. இளம் தலைமுறையினருக்கு இருதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



SNR சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன் ஆகியோர் முன்னிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இந்த கண்காட்சியை துவங்கி வைத்து பார்வையிட்டார்.



மருத்துவமனையின் இருதயவியல் மற்றும் இருதய அறுவை சிகிச்சை துறையின் மருத்துவர்கள் கண்காட்சியை வழிநடத்தினர்.



நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், நோயில்லா வாழ்விற்கு சரியான உணவு பழக்கமும் உடற்பயிற்சியும் அவசியம் என்றும், அரசு சார்பில் சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், அரசு விழாக்களில் அங்கன்வாடி சார்பில் அரங்கம் அமைக்கப்பட்டு ஆரோக்கியமான வாழ்விற்கு தேவையானவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.



இக்கண்காட்சியில், பார்வையாளர்களுக்கு இருதய செயல்பாடு மற்றும் இருதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் மாதிரி இருதயத்தின் உடற்கூறியல் இடம்பெற்றிருந்தது. மேலும் இதயத்தில் ஸ்டென்ட் எவ்வாறு பொருத்தப்படுகின்றன, இதயத்தில் உள்ள அடைப்புகளுக்கு எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகின்றன என்பது குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. பேஸ்மேக்கர் குறித்த காட்சியும் இடம் பெற்றிருந்தது. இந்த உயிர்க்காக்கும் கருவிகள் எவ்வாறு உடலில் பொருத்தப்பட்டு செயல்படுகின்றன என்பது குறித்தும் சீரற்ற இதய துடிப்புகளை இக்கருவிகள் மூலம் சீராக வைத்திருப்பது குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.

குழந்தைகளுக்கான இருதயவியல், சிறப்பு இருதய அறுவை சிகிச்சைகள் மற்றும் எலெக்ட்ரோபிசியாலஜி, லேசர் கரோனரி ஆன்ஜியோபிளாஸ்ட்டி குறித்த புதிய முன்னேற்றங்கள் பற்றிய விவரங்களும் காணொளிகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டது.



கண்காட்சியில் நேரடியாக சிபிஆர் (CPR) செயல்விளக்கம் பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர்கள், இருதய நோய்களைத் தவிர்க்க உதவும் ஆரோக்கியமான உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் பற்றிய முக்கிய குறிப்புகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.



இக்கண்காட்சி செப்டம்பர் 22 வரை நடைபெறும் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...