அன்னூர் அருகே பாலிடெக்னிக் மாணவருக்கு பாலியல் தொந்தரவு: முதியவர் போக்சோவில் கைது

அன்னூர் அருகே 16 வயது பாலிடெக்னிக் மாணவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த 60 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சைல்டு ஹெல்ப்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டது.


கோவை: அன்னூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், கோவையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த வாரம் இச்சிறுவன் சாலையில் நடந்து செல்லும்போது, நல்லி செட்டிபாளையத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் பத்மநாதன் என்பவர் அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் சைல்டு ஹெல்ப்லைன் உதவியை நாடினார். இதையடுத்து, சைல்டு ஹெல்ப்லைன் அமைப்பின் மேற்பார்வையாளர் சூரியமணி, அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில், மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் நிர்மலா வழக்குப் பதிவு செய்தார். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட பத்மநாதனை நேற்று (செப்டம்பர் 17) கைது செய்தனர்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....