அன்னூர் அருகே பாலிடெக்னிக் மாணவருக்கு பாலியல் தொந்தரவு: முதியவர் போக்சோவில் கைது

அன்னூர் அருகே 16 வயது பாலிடெக்னிக் மாணவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த 60 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சைல்டு ஹெல்ப்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டது.


கோவை: அன்னூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், கோவையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த வாரம் இச்சிறுவன் சாலையில் நடந்து செல்லும்போது, நல்லி செட்டிபாளையத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் பத்மநாதன் என்பவர் அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் சைல்டு ஹெல்ப்லைன் உதவியை நாடினார். இதையடுத்து, சைல்டு ஹெல்ப்லைன் அமைப்பின் மேற்பார்வையாளர் சூரியமணி, அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில், மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் நிர்மலா வழக்குப் பதிவு செய்தார். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட பத்மநாதனை நேற்று (செப்டம்பர் 17) கைது செய்தனர்.

Newsletter

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...