அன்னூர் அருகே பாலிடெக்னிக் மாணவருக்கு பாலியல் தொந்தரவு: முதியவர் போக்சோவில் கைது

அன்னூர் அருகே 16 வயது பாலிடெக்னிக் மாணவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த 60 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சைல்டு ஹெல்ப்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டது.


கோவை: அன்னூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், கோவையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த வாரம் இச்சிறுவன் சாலையில் நடந்து செல்லும்போது, நல்லி செட்டிபாளையத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் பத்மநாதன் என்பவர் அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் சைல்டு ஹெல்ப்லைன் உதவியை நாடினார். இதையடுத்து, சைல்டு ஹெல்ப்லைன் அமைப்பின் மேற்பார்வையாளர் சூரியமணி, அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில், மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் நிர்மலா வழக்குப் பதிவு செய்தார். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட பத்மநாதனை நேற்று (செப்டம்பர் 17) கைது செய்தனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...