அன்னூர் அருகே பாலிடெக்னிக் மாணவருக்கு பாலியல் தொந்தரவு: முதியவர் போக்சோவில் கைது

அன்னூர் அருகே 16 வயது பாலிடெக்னிக் மாணவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த 60 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சைல்டு ஹெல்ப்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டது.


கோவை: அன்னூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், கோவையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த வாரம் இச்சிறுவன் சாலையில் நடந்து செல்லும்போது, நல்லி செட்டிபாளையத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் பத்மநாதன் என்பவர் அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் சைல்டு ஹெல்ப்லைன் உதவியை நாடினார். இதையடுத்து, சைல்டு ஹெல்ப்லைன் அமைப்பின் மேற்பார்வையாளர் சூரியமணி, அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில், மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் நிர்மலா வழக்குப் பதிவு செய்தார். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட பத்மநாதனை நேற்று (செப்டம்பர் 17) கைது செய்தனர்.

Newsletter

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...