கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் வரசித்தி விநாயகர் கோயிலில் முப்பெரும் விழா

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் 2ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு பூஜைகள், ஹோமங்கள், அபிஷேகங்கள் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.



கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயிலில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 2ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.



மங்கள இசையுடன் தொடங்கிய விழாவில் விக்னேஷ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, கலச பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கணபதி ஹோமம் மற்றும் நவக்ரஹ ஹோமம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.



அதன்பின்னர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு 108 குடம் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. பெண் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். மேலும் மூலவருக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக, அருள்மிகு வரசித்தி விநாயகர், மூஷிக வாகனம், விசாலாட்சி அம்பிக்கை சமேத விஸ்வநாதர், நந்தியம் பெருமான், அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்ரமண்யர் சுவாமிகளுக்கு புதியதாக செய்யப்பட்ட வெள்ளிக்கவசங்கள் சாற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. மேலும் வான வேடிக்கை நிகழ்ச்சியும், வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமி திருவீதி உலாவும் நடத்தப்பட்டன.

இந்த விழாவில் நரசிம்மநாயக்கன்பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகக்குழு செய்திருந்தது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...