கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் வரசித்தி விநாயகர் கோயிலில் முப்பெரும் விழா

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் 2ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு பூஜைகள், ஹோமங்கள், அபிஷேகங்கள் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.



கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயிலில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 2ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.



மங்கள இசையுடன் தொடங்கிய விழாவில் விக்னேஷ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, கலச பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கணபதி ஹோமம் மற்றும் நவக்ரஹ ஹோமம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.



அதன்பின்னர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு 108 குடம் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. பெண் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். மேலும் மூலவருக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக, அருள்மிகு வரசித்தி விநாயகர், மூஷிக வாகனம், விசாலாட்சி அம்பிக்கை சமேத விஸ்வநாதர், நந்தியம் பெருமான், அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்ரமண்யர் சுவாமிகளுக்கு புதியதாக செய்யப்பட்ட வெள்ளிக்கவசங்கள் சாற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. மேலும் வான வேடிக்கை நிகழ்ச்சியும், வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமி திருவீதி உலாவும் நடத்தப்பட்டன.

இந்த விழாவில் நரசிம்மநாயக்கன்பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகக்குழு செய்திருந்தது.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...