கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் வரசித்தி விநாயகர் கோயிலில் முப்பெரும் விழா

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் 2ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு பூஜைகள், ஹோமங்கள், அபிஷேகங்கள் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.



கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயிலில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 2ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.



மங்கள இசையுடன் தொடங்கிய விழாவில் விக்னேஷ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, கலச பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கணபதி ஹோமம் மற்றும் நவக்ரஹ ஹோமம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.



அதன்பின்னர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு 108 குடம் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. பெண் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். மேலும் மூலவருக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக, அருள்மிகு வரசித்தி விநாயகர், மூஷிக வாகனம், விசாலாட்சி அம்பிக்கை சமேத விஸ்வநாதர், நந்தியம் பெருமான், அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்ரமண்யர் சுவாமிகளுக்கு புதியதாக செய்யப்பட்ட வெள்ளிக்கவசங்கள் சாற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. மேலும் வான வேடிக்கை நிகழ்ச்சியும், வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமி திருவீதி உலாவும் நடத்தப்பட்டன.

இந்த விழாவில் நரசிம்மநாயக்கன்பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகக்குழு செய்திருந்தது.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...