கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் வரசித்தி விநாயகர் கோயிலில் முப்பெரும் விழா

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் 2ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு பூஜைகள், ஹோமங்கள், அபிஷேகங்கள் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.



கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயிலில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 2ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.



மங்கள இசையுடன் தொடங்கிய விழாவில் விக்னேஷ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, கலச பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கணபதி ஹோமம் மற்றும் நவக்ரஹ ஹோமம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.



அதன்பின்னர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு 108 குடம் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. பெண் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். மேலும் மூலவருக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக, அருள்மிகு வரசித்தி விநாயகர், மூஷிக வாகனம், விசாலாட்சி அம்பிக்கை சமேத விஸ்வநாதர், நந்தியம் பெருமான், அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்ரமண்யர் சுவாமிகளுக்கு புதியதாக செய்யப்பட்ட வெள்ளிக்கவசங்கள் சாற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. மேலும் வான வேடிக்கை நிகழ்ச்சியும், வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமி திருவீதி உலாவும் நடத்தப்பட்டன.

இந்த விழாவில் நரசிம்மநாயக்கன்பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகக்குழு செய்திருந்தது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...