கோவையில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலத்தையொட்டி இன்று போக்குவரத்து மாற்றம்

கோவையில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு செப்டம்பர் 11 அன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் லாரிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகரில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலத்தையொட்டி இன்று (செப்டம்பர் 11) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்படுவதையொட்டி இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் லாரிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து பேரூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் பேரூர் புறவழிச் சாலை, செல்வபுரம் சிவாலயா திரையரங்க சந்திப்பு வழியாகச் செல்ல வேண்டும். காந்திபுரம் மற்றும் டவுன்ஹாலில் இருந்து வைசியாள் வீதி, சலீவன் வீதியில் செல்லும் வாகனங்கள் உக்கடம், பேரூர் புறவழிச் சாலை, சிவாலயா திரையரங்க சந்திப்பு வழியாக செல்வபுரம் சென்று செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.

உக்கடம் வழியாக திருச்சி சாலை மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் சுங்கம் புறவழிச் சாலை வழியாக சுங்கம் சந்திப்பை அடைந்து திருச்சி சாலையில் செல்ல வேண்டும். உக்கடம் வழியாக மேட்டுப்பாளையம் சாலை, தடாகம் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும் ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, ரயில் நிலையம் வழியாக காந்திபுரம் சென்று செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.

தடாகம் சாலையில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் வெங்கிட்டாபுரம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி என்எஸ்ஆர் சாலை வழியாக மேட்டுப்பாளையம் சாலை, ஏஆர்சி சந்திப்பு, சிவானந்தா காலனி வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டும். மேட்டுப்பாளையத்தில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சங்கனூர் பாலம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கணபதி, காந்திபுரம் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.

விநாயகர் சிலை ஊர்வலம் வட கோவை மேம்பாலத்தையும், சென்ட்ரல் திரையரங்கத்தையும் கடந்த பிறகு வட கோவை மேம்பாலம் வழியாக காந்திபுரம் செல்லலாம். பேரூரில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் பேரூர் சாலை, செல்வபுரம் மேல்நிலைப் பள்ளி அருகே வலதுபுறம் திரும்பி பேரூர் புறவழிச் சாலை வழியாக உக்கடத்தை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

பேரூர் சாலையிலிருந்து தடாகம் செல்லும் வாகனங்கள் சிவாலயா சந்திப்பு, ராம மூர்த்தி சாலை, பூசாரிபாளையம், சீரநாயக்கன்பாளையம் வழியாக மருதமலை சாலையை அடைந்து லாலி சாலை வழியாக தடாகம் சாலையில் செல்லலாம்.

விநாயகர் சிலை ஊர்வலப் பாதையான ராஜ வீதி, ரங்கே கவுடர் வீதி, பெரிய கடைவீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதி, சலீவன் வீதி, காந்தி பார்க், தெலுங்கு வீதி, சுக்கிரவார்ப்பேட்டை, தியாகி குமரன் வீதி, இடையர் வீதி, தெப்பக்குளம் மைதானம், பூ மார்க்கெட் சாலை, பால் மார்க்கெட் சாலை, டி.பி.சாலை, லைட்ஹவுஸ் மைதானம், சுப்பிரமணியம் சாலை, வெங்கடகிருஷ்ணா சாலை, தடாகம் சாலை, பூசாரிபாளையம் சாலை ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...