கோவையில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலத்தையொட்டி இன்று போக்குவரத்து மாற்றம்

கோவையில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு செப்டம்பர் 11 அன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் லாரிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகரில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலத்தையொட்டி இன்று (செப்டம்பர் 11) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்படுவதையொட்டி இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் லாரிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து பேரூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் பேரூர் புறவழிச் சாலை, செல்வபுரம் சிவாலயா திரையரங்க சந்திப்பு வழியாகச் செல்ல வேண்டும். காந்திபுரம் மற்றும் டவுன்ஹாலில் இருந்து வைசியாள் வீதி, சலீவன் வீதியில் செல்லும் வாகனங்கள் உக்கடம், பேரூர் புறவழிச் சாலை, சிவாலயா திரையரங்க சந்திப்பு வழியாக செல்வபுரம் சென்று செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.

உக்கடம் வழியாக திருச்சி சாலை மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் சுங்கம் புறவழிச் சாலை வழியாக சுங்கம் சந்திப்பை அடைந்து திருச்சி சாலையில் செல்ல வேண்டும். உக்கடம் வழியாக மேட்டுப்பாளையம் சாலை, தடாகம் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும் ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, ரயில் நிலையம் வழியாக காந்திபுரம் சென்று செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.

தடாகம் சாலையில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் வெங்கிட்டாபுரம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி என்எஸ்ஆர் சாலை வழியாக மேட்டுப்பாளையம் சாலை, ஏஆர்சி சந்திப்பு, சிவானந்தா காலனி வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டும். மேட்டுப்பாளையத்தில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சங்கனூர் பாலம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கணபதி, காந்திபுரம் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.

விநாயகர் சிலை ஊர்வலம் வட கோவை மேம்பாலத்தையும், சென்ட்ரல் திரையரங்கத்தையும் கடந்த பிறகு வட கோவை மேம்பாலம் வழியாக காந்திபுரம் செல்லலாம். பேரூரில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் பேரூர் சாலை, செல்வபுரம் மேல்நிலைப் பள்ளி அருகே வலதுபுறம் திரும்பி பேரூர் புறவழிச் சாலை வழியாக உக்கடத்தை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

பேரூர் சாலையிலிருந்து தடாகம் செல்லும் வாகனங்கள் சிவாலயா சந்திப்பு, ராம மூர்த்தி சாலை, பூசாரிபாளையம், சீரநாயக்கன்பாளையம் வழியாக மருதமலை சாலையை அடைந்து லாலி சாலை வழியாக தடாகம் சாலையில் செல்லலாம்.

விநாயகர் சிலை ஊர்வலப் பாதையான ராஜ வீதி, ரங்கே கவுடர் வீதி, பெரிய கடைவீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதி, சலீவன் வீதி, காந்தி பார்க், தெலுங்கு வீதி, சுக்கிரவார்ப்பேட்டை, தியாகி குமரன் வீதி, இடையர் வீதி, தெப்பக்குளம் மைதானம், பூ மார்க்கெட் சாலை, பால் மார்க்கெட் சாலை, டி.பி.சாலை, லைட்ஹவுஸ் மைதானம், சுப்பிரமணியம் சாலை, வெங்கடகிருஷ்ணா சாலை, தடாகம் சாலை, பூசாரிபாளையம் சாலை ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...