உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க கோரி பொள்ளாச்சி நகர திமுக தீர்மானம்

பொள்ளாச்சியில் நடைபெற்ற நகர திமுக பொது உறுப்பினர் கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக பவள விழா கொண்டாட்டம் மற்றும் வரவிருக்கும் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.



கோவை: பொள்ளாச்சியில் உள்ள லாரி உரிமையாளர் சங்க திருமண மண்டபத்தில் நகர திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் என்ற முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொள்ளாச்சி நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்சாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.



கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்றும், விரைவில் நடைபெற இருக்கும் தேர்தலுக்கு ஆயத்தமாக வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஒவ்வொரு பூத் கமிட்டி நிர்வாகிகளும் சிறப்பாக பணியாற்றி, வருகிற தேர்தலில் திமுக வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.



திமுக தலைமை அறிவித்தபடி திமுக பவள விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் மகேந்திரன், பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், துணைத் தலைவர் கௌதமன், நகர துணை செயலாளர் தர்மராஜ் உள்ளிட்ட பல திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...