உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க கோரி பொள்ளாச்சி நகர திமுக தீர்மானம்

பொள்ளாச்சியில் நடைபெற்ற நகர திமுக பொது உறுப்பினர் கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக பவள விழா கொண்டாட்டம் மற்றும் வரவிருக்கும் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.



கோவை: பொள்ளாச்சியில் உள்ள லாரி உரிமையாளர் சங்க திருமண மண்டபத்தில் நகர திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் என்ற முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொள்ளாச்சி நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்சாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.



கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்றும், விரைவில் நடைபெற இருக்கும் தேர்தலுக்கு ஆயத்தமாக வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஒவ்வொரு பூத் கமிட்டி நிர்வாகிகளும் சிறப்பாக பணியாற்றி, வருகிற தேர்தலில் திமுக வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.



திமுக தலைமை அறிவித்தபடி திமுக பவள விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் மகேந்திரன், பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், துணைத் தலைவர் கௌதமன், நகர துணை செயலாளர் தர்மராஜ் உள்ளிட்ட பல திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...