தென்னிந்தியாவின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரியாக ஜி.கே.என்.எம் மருத்துவமனை சிஇஓ தேர்வு

சென்னையில் நடைபெற்ற இந்திய வர்த்தக சம்மேளனத்தின் தேசிய சுகாதார சிறப்பு விருதுகள் 2024 நிகழ்வில், ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி தென்னிந்தியாவின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார்.


சென்னையில் நடைபெற்ற இந்திய வர்த்தக சம்மேளனத்தின் தேசிய சுகாதார சிறப்பு விருதுகள் 2024 நிகழ்வில், ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி தென்னிந்தியாவின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த மதிப்புமிக்க விருது சுகாதாரத் துறையில் சிறந்த தலைமைத்துவம், தொலைநோக்கு பார்வை மற்றும் சிறப்புக்கான அர்ப்பணிப்பை அங்கீகரிக்கிறது. நோயாளிகளின் உடல்நிலையை மேம்படுத்துதல், புதுமைகளை உருவாக்குதல், சிகிச்சை அணுகலை விரிவுபடுத்துதல் மற்றும் சுகாதார தீர்வுகளை புதுப்பித்தல் போன்ற சுகாதாரத் துறையில் அவரது சிறப்பான சாதனைகளுக்காக டாக்டர் ரகுபதி வேலுசாமி தகுதி வாய்ந்த பல பரிந்துரைக்கப்பட்டவர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்.

40 ஆண்டுகளுக்கும் மேலான குறிப்பிடத்தக்க அனுபவத்தைக் கொண்ட டாக்டர் ரகுபதி வேலுசாமி, சுகாதாரத் துறையின் எதிர்காலம் தடுப்பு முறைகளையும் உள்ளடக்கிய முழுமையான மருத்துவ பராமரிப்பை வழங்குவதில் உள்ளது என்று நம்புகிறார். நோயாளி மையமாக கொண்ட பராமரிப்பை ஊக்குவிப்பதிலும், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதற்காக, மருத்துவமனையில் இருந்து வீடு மற்றும் வீட்டில் இருந்து மருத்துவமனை என இரு வழிகளிலும் நோயாளிகளுக்கு தொடர்ச்சியான பராமரிப்பை வழங்க, முதுகலை பட்டம் பெற்ற செவிலியர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்களை கொண்ட குழுவை உருவாக்கியுள்ளார்.

ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் டாக்டர் ரகுபதி வேலுசாமி தலைமையிலான சுகாதாரக் குழு மூன்று பகுதிகளில் கவனம் செலுத்துகிறது - மருத்துவர்களின் ஈடுபாட்டின் மூலம் சிகிச்சை சிறப்பை அடைதல், நோயாளி சேவை சிறப்பு மற்றும் ஊழியர்களின் ஈடுபாடு ஆகியவற்றை "நாங்கள் கவனித்துக் கொள்கிறோம், அது தெரிகிறது" என்ற குறிக்கோளுடன் செயல்படுத்துகிறது.

மேலும், இந்த மருத்துவமனை இரண்டு கூடுதல் பிரிவுகளில் விருதுகளைப் பெற்றுள்ளது. அவை "தென்னிந்தியாவின் சிறந்த மருத்துவமனை" மற்றும் "தென்னிந்தியாவின் தர கட்டுப்பாட்டில் சிறந்த மருத்துவமனை" (300க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ள பிரிவு) ஆகும். இந்த மதிப்புமிக்க அங்கீகாரம் தரம், புதுமை மற்றும் நோயாளி மையமாக கொண்ட பராமரிப்பை முன்னுரிமைப்படுத்துவதன் மூலம் சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதில் அவர்களின் சிறப்பான சாதனைகள் மற்றும் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...