தென்னிந்தியாவின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரியாக ஜி.கே.என்.எம் மருத்துவமனை சிஇஓ தேர்வு

சென்னையில் நடைபெற்ற இந்திய வர்த்தக சம்மேளனத்தின் தேசிய சுகாதார சிறப்பு விருதுகள் 2024 நிகழ்வில், ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி தென்னிந்தியாவின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார்.


சென்னையில் நடைபெற்ற இந்திய வர்த்தக சம்மேளனத்தின் தேசிய சுகாதார சிறப்பு விருதுகள் 2024 நிகழ்வில், ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி தென்னிந்தியாவின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த மதிப்புமிக்க விருது சுகாதாரத் துறையில் சிறந்த தலைமைத்துவம், தொலைநோக்கு பார்வை மற்றும் சிறப்புக்கான அர்ப்பணிப்பை அங்கீகரிக்கிறது. நோயாளிகளின் உடல்நிலையை மேம்படுத்துதல், புதுமைகளை உருவாக்குதல், சிகிச்சை அணுகலை விரிவுபடுத்துதல் மற்றும் சுகாதார தீர்வுகளை புதுப்பித்தல் போன்ற சுகாதாரத் துறையில் அவரது சிறப்பான சாதனைகளுக்காக டாக்டர் ரகுபதி வேலுசாமி தகுதி வாய்ந்த பல பரிந்துரைக்கப்பட்டவர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்.

40 ஆண்டுகளுக்கும் மேலான குறிப்பிடத்தக்க அனுபவத்தைக் கொண்ட டாக்டர் ரகுபதி வேலுசாமி, சுகாதாரத் துறையின் எதிர்காலம் தடுப்பு முறைகளையும் உள்ளடக்கிய முழுமையான மருத்துவ பராமரிப்பை வழங்குவதில் உள்ளது என்று நம்புகிறார். நோயாளி மையமாக கொண்ட பராமரிப்பை ஊக்குவிப்பதிலும், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதற்காக, மருத்துவமனையில் இருந்து வீடு மற்றும் வீட்டில் இருந்து மருத்துவமனை என இரு வழிகளிலும் நோயாளிகளுக்கு தொடர்ச்சியான பராமரிப்பை வழங்க, முதுகலை பட்டம் பெற்ற செவிலியர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்களை கொண்ட குழுவை உருவாக்கியுள்ளார்.

ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் டாக்டர் ரகுபதி வேலுசாமி தலைமையிலான சுகாதாரக் குழு மூன்று பகுதிகளில் கவனம் செலுத்துகிறது - மருத்துவர்களின் ஈடுபாட்டின் மூலம் சிகிச்சை சிறப்பை அடைதல், நோயாளி சேவை சிறப்பு மற்றும் ஊழியர்களின் ஈடுபாடு ஆகியவற்றை "நாங்கள் கவனித்துக் கொள்கிறோம், அது தெரிகிறது" என்ற குறிக்கோளுடன் செயல்படுத்துகிறது.

மேலும், இந்த மருத்துவமனை இரண்டு கூடுதல் பிரிவுகளில் விருதுகளைப் பெற்றுள்ளது. அவை "தென்னிந்தியாவின் சிறந்த மருத்துவமனை" மற்றும் "தென்னிந்தியாவின் தர கட்டுப்பாட்டில் சிறந்த மருத்துவமனை" (300க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ள பிரிவு) ஆகும். இந்த மதிப்புமிக்க அங்கீகாரம் தரம், புதுமை மற்றும் நோயாளி மையமாக கொண்ட பராமரிப்பை முன்னுரிமைப்படுத்துவதன் மூலம் சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதில் அவர்களின் சிறப்பான சாதனைகள் மற்றும் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...