கோவையில் ஆகஸ்ட் 4-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கைகள், கால்கள் வழங்கும் முகாம்

கோவையில் ஆகஸ்ட் 4-ம் தேதி நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கைகள் மற்றும் கால்கள் வழங்கும் முகாமை நடத்துகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பயனாளிகள் பங்கேற்க உள்ளனர்.


Coimbatore: கோவையில் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கைகள் மற்றும் கால்கள் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நாராயண் சேவா சன்ஸ்தான் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த முகாமை நடத்துகிறது.

இந்த முகாமில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பயனாளிகள் கலந்து கொள்ள உள்ளனர். உதய்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பு, இந்தியா மட்டுமின்றி ஆப்பிரிக்க நாடுகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் மற்றும் கைகளை இலவசமாகப் பொருத்தும் முகாம்களை நடத்தி வருகிறது.



தமிழகத்தில் முதன்முறையாக கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் மற்றும் கைகள் அமைப்பதற்கான அளவீடு எடுக்கும் முதல் கட்ட முகாம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

அளவீடுகள் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவக் குழுவினரின் உதவியுடன் செயற்கை கால் மற்றும் கைகளைப் பொருத்தும் முகாம் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பகவான் பிரசாந்த் கவுர் கூறுகையில், "செயற்கை கால் மற்றும் கைகள் அளவீடுகள் கொடுத்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இந்த முகாமில் பங்கேற்று பயனடையுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்" என்றார்.

முன்னதாக முகாம் தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டியை தன்னார்வலர்கள் சந்தோஷ் முண்டாடா, கமல் கிஷோர், கவுர் ஆகியோர் வெளியிட்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...