கோவையில் ஆகஸ்ட் 4-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கைகள், கால்கள் வழங்கும் முகாம்

கோவையில் ஆகஸ்ட் 4-ம் தேதி நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கைகள் மற்றும் கால்கள் வழங்கும் முகாமை நடத்துகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பயனாளிகள் பங்கேற்க உள்ளனர்.


Coimbatore: கோவையில் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கைகள் மற்றும் கால்கள் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நாராயண் சேவா சன்ஸ்தான் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த முகாமை நடத்துகிறது.

இந்த முகாமில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பயனாளிகள் கலந்து கொள்ள உள்ளனர். உதய்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பு, இந்தியா மட்டுமின்றி ஆப்பிரிக்க நாடுகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் மற்றும் கைகளை இலவசமாகப் பொருத்தும் முகாம்களை நடத்தி வருகிறது.



தமிழகத்தில் முதன்முறையாக கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் மற்றும் கைகள் அமைப்பதற்கான அளவீடு எடுக்கும் முதல் கட்ட முகாம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

அளவீடுகள் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவக் குழுவினரின் உதவியுடன் செயற்கை கால் மற்றும் கைகளைப் பொருத்தும் முகாம் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பகவான் பிரசாந்த் கவுர் கூறுகையில், "செயற்கை கால் மற்றும் கைகள் அளவீடுகள் கொடுத்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இந்த முகாமில் பங்கேற்று பயனடையுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்" என்றார்.

முன்னதாக முகாம் தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டியை தன்னார்வலர்கள் சந்தோஷ் முண்டாடா, கமல் கிஷோர், கவுர் ஆகியோர் வெளியிட்டனர்.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...