கோவையில் ஆகஸ்ட் 4-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கைகள், கால்கள் வழங்கும் முகாம்

கோவையில் ஆகஸ்ட் 4-ம் தேதி நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கைகள் மற்றும் கால்கள் வழங்கும் முகாமை நடத்துகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பயனாளிகள் பங்கேற்க உள்ளனர்.


Coimbatore: கோவையில் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கைகள் மற்றும் கால்கள் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நாராயண் சேவா சன்ஸ்தான் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த முகாமை நடத்துகிறது.

இந்த முகாமில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பயனாளிகள் கலந்து கொள்ள உள்ளனர். உதய்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பு, இந்தியா மட்டுமின்றி ஆப்பிரிக்க நாடுகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் மற்றும் கைகளை இலவசமாகப் பொருத்தும் முகாம்களை நடத்தி வருகிறது.



தமிழகத்தில் முதன்முறையாக கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் மற்றும் கைகள் அமைப்பதற்கான அளவீடு எடுக்கும் முதல் கட்ட முகாம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

அளவீடுகள் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவக் குழுவினரின் உதவியுடன் செயற்கை கால் மற்றும் கைகளைப் பொருத்தும் முகாம் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பகவான் பிரசாந்த் கவுர் கூறுகையில், "செயற்கை கால் மற்றும் கைகள் அளவீடுகள் கொடுத்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இந்த முகாமில் பங்கேற்று பயனடையுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்" என்றார்.

முன்னதாக முகாம் தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டியை தன்னார்வலர்கள் சந்தோஷ் முண்டாடா, கமல் கிஷோர், கவுர் ஆகியோர் வெளியிட்டனர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...