கோவையில் மகளை அடித்துக் கொன்ற தாய் கைது

கோவையில் 10 வயது மகளை கரண்டியால் அடித்து கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார். சிறுமியின் உடலில் 33 காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.


Coimbatore: கோவை தெலுங்குபாளையம், மெய்யப்பன் நகரில் வசிக்கும் தட்சிணாமூர்த்தி (39) மற்றும் சாந்தலட்சுமி தம்பதியரின் 10 வயது மகள் அனுஸ்ரீயின் மரணம் தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மே 17ஆம் தேதி, அனுஸ்ரீ தூக்கத்தில் கட்டிலில் இருந்து விழுந்து மயக்கமடைந்ததாக கூறி, அவரது தாய் சாந்தலட்சுமி அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அனுஸ்ரீ, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

செல்வபுரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சமீபத்தில் வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமியின் உடலில் 33 காயங்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், சாந்தலட்சுமி தனது மகளை அடிக்கடி கரண்டியால் அடித்துள்ளதாக தெரியவந்தது. இந்த அடிகளால் ஏற்பட்ட காயங்களினால் உடல் சதை பாதிக்கப்பட்டு, இரத்தம் வெளியேறி சிறுநீரகத்தை பாதித்து சிறுமி இறந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில், ஜூலை 26ஆம் தேதி சாந்தலட்சுமி கைது செய்யப்பட்டார். அவர் மீது "மரணம் ஏற்படும் என்று தெரியாமல் குற்றத்தை விளைவித்தல்" என்ற சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சாந்தலட்சுமி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் கோவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...