கோவையில் மகளை அடித்துக் கொன்ற தாய் கைது

கோவையில் 10 வயது மகளை கரண்டியால் அடித்து கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார். சிறுமியின் உடலில் 33 காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.


Coimbatore: கோவை தெலுங்குபாளையம், மெய்யப்பன் நகரில் வசிக்கும் தட்சிணாமூர்த்தி (39) மற்றும் சாந்தலட்சுமி தம்பதியரின் 10 வயது மகள் அனுஸ்ரீயின் மரணம் தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மே 17ஆம் தேதி, அனுஸ்ரீ தூக்கத்தில் கட்டிலில் இருந்து விழுந்து மயக்கமடைந்ததாக கூறி, அவரது தாய் சாந்தலட்சுமி அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அனுஸ்ரீ, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

செல்வபுரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சமீபத்தில் வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமியின் உடலில் 33 காயங்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், சாந்தலட்சுமி தனது மகளை அடிக்கடி கரண்டியால் அடித்துள்ளதாக தெரியவந்தது. இந்த அடிகளால் ஏற்பட்ட காயங்களினால் உடல் சதை பாதிக்கப்பட்டு, இரத்தம் வெளியேறி சிறுநீரகத்தை பாதித்து சிறுமி இறந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில், ஜூலை 26ஆம் தேதி சாந்தலட்சுமி கைது செய்யப்பட்டார். அவர் மீது "மரணம் ஏற்படும் என்று தெரியாமல் குற்றத்தை விளைவித்தல்" என்ற சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சாந்தலட்சுமி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் கோவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...