கோவையில் மகளை அடித்துக் கொன்ற தாய் கைது

கோவையில் 10 வயது மகளை கரண்டியால் அடித்து கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார். சிறுமியின் உடலில் 33 காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.


Coimbatore: கோவை தெலுங்குபாளையம், மெய்யப்பன் நகரில் வசிக்கும் தட்சிணாமூர்த்தி (39) மற்றும் சாந்தலட்சுமி தம்பதியரின் 10 வயது மகள் அனுஸ்ரீயின் மரணம் தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மே 17ஆம் தேதி, அனுஸ்ரீ தூக்கத்தில் கட்டிலில் இருந்து விழுந்து மயக்கமடைந்ததாக கூறி, அவரது தாய் சாந்தலட்சுமி அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அனுஸ்ரீ, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

செல்வபுரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சமீபத்தில் வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமியின் உடலில் 33 காயங்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், சாந்தலட்சுமி தனது மகளை அடிக்கடி கரண்டியால் அடித்துள்ளதாக தெரியவந்தது. இந்த அடிகளால் ஏற்பட்ட காயங்களினால் உடல் சதை பாதிக்கப்பட்டு, இரத்தம் வெளியேறி சிறுநீரகத்தை பாதித்து சிறுமி இறந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில், ஜூலை 26ஆம் தேதி சாந்தலட்சுமி கைது செய்யப்பட்டார். அவர் மீது "மரணம் ஏற்படும் என்று தெரியாமல் குற்றத்தை விளைவித்தல்" என்ற சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சாந்தலட்சுமி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் கோவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...