பல்லடம் அருகே அடிப்படை வசதிகளுக்காக பொதுமக்கள் சாலை மறியல்: ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வண்ணாந்துறை புதூரில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் காங்கேயம் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள நாச்சிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வண்ணாந்துறை புதூர் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தெரு விளக்கு, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை மனு அளித்துள்ளனர்.

கிராம சபை கூட்டங்களிலும் இது தொடர்பாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை எந்த அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், இன்று காலை பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து 50-க்கும் மேற்பட்டோர் காங்கேயம் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் விஜிகுமார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மக்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க ஊராட்சி நிர்வாகத்திடம் பேசுவதாக உறுதியளித்தார். இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் காங்கேயம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Newsletter

கரூர் தேர்தல் களத்தில் பரபரப்பு: செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு..!

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 7 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று கா...

“எடப்பாடி சொல்வது போல யாருடைய காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு இல்லை” - காங்கேயத்தில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின...

கோவை வடக்கில் வானதிக்கு ஆதரவாக BJP மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தீவிர பரப்புரை

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஓணாம்பாளையத்தில் இன்று பரப்பு...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் தீவிர பிரசாரம்

கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் வீடு வீடாக சென்று பி...

கோவை தெற்கு தொகுதி: ராமநாதபுரம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் ராமநாதபுரம் வார்டு 66 உட்பட பல பகுதிகளில் வீடு வீடாகச் சென்று...

ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்று வாக்கு சேகரித்த K.R. Jayaram

கோவை சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K.R. Jayaram ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்பனையில் ஈடுபட்டு வா...