பல்லடம் அருகே அடிப்படை வசதிகளுக்காக பொதுமக்கள் சாலை மறியல்: ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வண்ணாந்துறை புதூரில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் காங்கேயம் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள நாச்சிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வண்ணாந்துறை புதூர் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தெரு விளக்கு, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை மனு அளித்துள்ளனர்.

கிராம சபை கூட்டங்களிலும் இது தொடர்பாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை எந்த அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், இன்று காலை பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து 50-க்கும் மேற்பட்டோர் காங்கேயம் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் விஜிகுமார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மக்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க ஊராட்சி நிர்வாகத்திடம் பேசுவதாக உறுதியளித்தார். இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் காங்கேயம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...