நீலாம்பூர் அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனை: இரு மாநிலங்களைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த இருவரை சூலூர் காவல்துறையினர் கைது செய்தனர். ரூ.2.08 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Coimbatore: கோவை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த கோவை மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக சூலூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஜூலை 10 அன்று சூலூர் காவல் துறையினர் நீலாம்பூர் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு நான்கு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருட்கள் கொண்டு வரப்படுவது கண்டறியப்பட்டது.

காவல் துறையினர் உடனடியாக வாகனத்தை மறித்து சோதனையிட்டனர். அதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தலராம் (31) மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (22) ஆகியோர் பயணித்தது தெரியவந்தது. வாகனத்தில் இருந்த 250 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இரு நபர்களையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து புகையிலைப் பொருட்கள் மற்றும் அவற்றை கொண்டு வந்த நான்கு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கைதான இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து சூலூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...