நீலாம்பூர் அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனை: இரு மாநிலங்களைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த இருவரை சூலூர் காவல்துறையினர் கைது செய்தனர். ரூ.2.08 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Coimbatore: கோவை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த கோவை மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக சூலூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஜூலை 10 அன்று சூலூர் காவல் துறையினர் நீலாம்பூர் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு நான்கு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருட்கள் கொண்டு வரப்படுவது கண்டறியப்பட்டது.

காவல் துறையினர் உடனடியாக வாகனத்தை மறித்து சோதனையிட்டனர். அதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தலராம் (31) மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (22) ஆகியோர் பயணித்தது தெரியவந்தது. வாகனத்தில் இருந்த 250 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இரு நபர்களையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து புகையிலைப் பொருட்கள் மற்றும் அவற்றை கொண்டு வந்த நான்கு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கைதான இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து சூலூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...