கோவைப்புதூரில் டெலிவரி ஊழியரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

கோவைப்புதூருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக பைக்கில் சென்ற நபரை மறித்து, மதுகுடிக்க பணம் தருமாறு மிரட்டி ரூ.700 ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் கார்த்திக்(31). தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மே.30 கோவைப்புதூருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக பைக்கில் சென்றார். அப்போது அவரை மறித்த 2 பேர் கார்த்திக்கிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டனர்.

அதற்கு அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த 2 பேரும் பீர்பாட்டிலை உடைத்து குத்திவிடுவதாக மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 700ஐ பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

பின்னர் இது குறித்து கார்த்திக், குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கார்த்திக்கை மிரட்டி பணம் பறித்தது, சுண்டாக்காமுத்தூரை சேர்ந்த மீன் வியாபாரி பூவேந்தன்(22) மற்றும் சுகுணாபுரம் மைல்கல்லை சேர்ந்த பெயிண்டர் சுதீர்பாபு(45) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...