கோவைப்புதூரில் டெலிவரி ஊழியரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

கோவைப்புதூருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக பைக்கில் சென்ற நபரை மறித்து, மதுகுடிக்க பணம் தருமாறு மிரட்டி ரூ.700 ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் கார்த்திக்(31). தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மே.30 கோவைப்புதூருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக பைக்கில் சென்றார். அப்போது அவரை மறித்த 2 பேர் கார்த்திக்கிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டனர்.

அதற்கு அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த 2 பேரும் பீர்பாட்டிலை உடைத்து குத்திவிடுவதாக மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 700ஐ பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

பின்னர் இது குறித்து கார்த்திக், குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கார்த்திக்கை மிரட்டி பணம் பறித்தது, சுண்டாக்காமுத்தூரை சேர்ந்த மீன் வியாபாரி பூவேந்தன்(22) மற்றும் சுகுணாபுரம் மைல்கல்லை சேர்ந்த பெயிண்டர் சுதீர்பாபு(45) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...