கோவைப்புதூரில் டெலிவரி ஊழியரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

கோவைப்புதூருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக பைக்கில் சென்ற நபரை மறித்து, மதுகுடிக்க பணம் தருமாறு மிரட்டி ரூ.700 ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் கார்த்திக்(31). தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மே.30 கோவைப்புதூருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக பைக்கில் சென்றார். அப்போது அவரை மறித்த 2 பேர் கார்த்திக்கிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டனர்.

அதற்கு அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த 2 பேரும் பீர்பாட்டிலை உடைத்து குத்திவிடுவதாக மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 700ஐ பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

பின்னர் இது குறித்து கார்த்திக், குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கார்த்திக்கை மிரட்டி பணம் பறித்தது, சுண்டாக்காமுத்தூரை சேர்ந்த மீன் வியாபாரி பூவேந்தன்(22) மற்றும் சுகுணாபுரம் மைல்கல்லை சேர்ந்த பெயிண்டர் சுதீர்பாபு(45) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...