கோவையில் 3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - தொழிலாளிக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துணி தேய்க்கும் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பளித்தார்.


கோவை: கோவை போத்தனூர் பஞ்சாயத்து அலுவலக ரோட்டை சேர்ந்தவர் ரவிக்குமார் (56). இவர் போத்தனூரில் துணி தேய்க்கும் கடை ஒன்றில் துணி தேய்க்கும் வேலை செய்து வந்தார். இவர் கடந்த (19.05.2023) அன்று அதே பகுதியை சேர்ந்த 3-ம் வகுப்பு படிக்கும் 7-வயது சிறுமி, தனது தாயார் கடையில் தேய்ப்பதற்கு கொடுத்த துணிகளை வாங்க சென்றார்.

அப்போது ரவிக்குமார் சிறுமியை கடைக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு புரிந்துள்ளார். பின்னர் இது குறித்து சிறுமியின் தாயார் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ரவிக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் நேற்று மே.16 தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் குற்றம் சாட்டப்பட்ட ரவிக்குமாருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் புலன் விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி, பெண் போலீஸ் சுகன்யா ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...