கோவையில் 3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - தொழிலாளிக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துணி தேய்க்கும் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பளித்தார்.


கோவை: கோவை போத்தனூர் பஞ்சாயத்து அலுவலக ரோட்டை சேர்ந்தவர் ரவிக்குமார் (56). இவர் போத்தனூரில் துணி தேய்க்கும் கடை ஒன்றில் துணி தேய்க்கும் வேலை செய்து வந்தார். இவர் கடந்த (19.05.2023) அன்று அதே பகுதியை சேர்ந்த 3-ம் வகுப்பு படிக்கும் 7-வயது சிறுமி, தனது தாயார் கடையில் தேய்ப்பதற்கு கொடுத்த துணிகளை வாங்க சென்றார்.

அப்போது ரவிக்குமார் சிறுமியை கடைக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு புரிந்துள்ளார். பின்னர் இது குறித்து சிறுமியின் தாயார் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ரவிக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் நேற்று மே.16 தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் குற்றம் சாட்டப்பட்ட ரவிக்குமாருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் புலன் விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி, பெண் போலீஸ் சுகன்யா ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...