கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சமூக வலைதள கணக்காளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

கோவையில் சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பகிரப்படுவதை தடுக்கவும், மாவட்டம் முழுவதும் இளைஞர் மத்தியில் நிலவும் சிக்கல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் SOCIAL MEDIA INFLUECER-கள் உடன் மாவட்ட நிர்வாகத்தினர் கலந்துரையாடினர்.


கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், சமூக வலைதள கணக்காளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று (மார்ச்.1) மதியம் 12 மணியளவில் நடைபெற்றது.



இதில் கோவையில் சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பகிரப்படுவதை தடுக்கவும், மாவட்டம் முழுவதும் இளைஞர் மத்தியில் நிலவும் சிக்கல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் SOCIAL MEDIA INFLUECER-கள் உடன் மாவட்ட நிர்வாகத்தினர் கலந்துரையாடினர்.



இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஆகியோர் முன்னிலையில் இந்த கலந்துரையாடல் நிகழ்ந்தது.

சமூக வலைதளங்களில் அதிக பின் தொடர்பவர்களை கொண்ட இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் பக்கங்களின் அட்மின்கள் சுமார் 70 பேர் இதில் பங்கேற்றனர். மேலும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு விதமான வதந்திகளும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளும் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அவற்றை தடுக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டன.



மேலும் இளைஞர்கள் அதிகமானோர் சமூக வலைதளங்களை பயன்படுத்தக்கூடிய சூழலில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுப்பது, சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற முக்கிய அம்சங்கள் இதில் பேசப்பட்டன.

எந்த ஒரு தகவலையும் உறுதிப்படுத்திக் கொள்ள சமூக வலைதளங்களில் போடும் போதும் மாவட்ட நிர்வாகத்தின் சமூக வலைதள கணக்குகளை TAG செய்யுமாறு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...