கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சமூக வலைதள கணக்காளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

கோவையில் சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பகிரப்படுவதை தடுக்கவும், மாவட்டம் முழுவதும் இளைஞர் மத்தியில் நிலவும் சிக்கல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் SOCIAL MEDIA INFLUECER-கள் உடன் மாவட்ட நிர்வாகத்தினர் கலந்துரையாடினர்.


கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், சமூக வலைதள கணக்காளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று (மார்ச்.1) மதியம் 12 மணியளவில் நடைபெற்றது.



இதில் கோவையில் சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பகிரப்படுவதை தடுக்கவும், மாவட்டம் முழுவதும் இளைஞர் மத்தியில் நிலவும் சிக்கல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் SOCIAL MEDIA INFLUECER-கள் உடன் மாவட்ட நிர்வாகத்தினர் கலந்துரையாடினர்.



இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஆகியோர் முன்னிலையில் இந்த கலந்துரையாடல் நிகழ்ந்தது.

சமூக வலைதளங்களில் அதிக பின் தொடர்பவர்களை கொண்ட இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் பக்கங்களின் அட்மின்கள் சுமார் 70 பேர் இதில் பங்கேற்றனர். மேலும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு விதமான வதந்திகளும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளும் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அவற்றை தடுக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டன.



மேலும் இளைஞர்கள் அதிகமானோர் சமூக வலைதளங்களை பயன்படுத்தக்கூடிய சூழலில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுப்பது, சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற முக்கிய அம்சங்கள் இதில் பேசப்பட்டன.

எந்த ஒரு தகவலையும் உறுதிப்படுத்திக் கொள்ள சமூக வலைதளங்களில் போடும் போதும் மாவட்ட நிர்வாகத்தின் சமூக வலைதள கணக்குகளை TAG செய்யுமாறு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...