கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சமூக வலைதள கணக்காளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

கோவையில் சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பகிரப்படுவதை தடுக்கவும், மாவட்டம் முழுவதும் இளைஞர் மத்தியில் நிலவும் சிக்கல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் SOCIAL MEDIA INFLUECER-கள் உடன் மாவட்ட நிர்வாகத்தினர் கலந்துரையாடினர்.


கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், சமூக வலைதள கணக்காளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று (மார்ச்.1) மதியம் 12 மணியளவில் நடைபெற்றது.



இதில் கோவையில் சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பகிரப்படுவதை தடுக்கவும், மாவட்டம் முழுவதும் இளைஞர் மத்தியில் நிலவும் சிக்கல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் SOCIAL MEDIA INFLUECER-கள் உடன் மாவட்ட நிர்வாகத்தினர் கலந்துரையாடினர்.



இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஆகியோர் முன்னிலையில் இந்த கலந்துரையாடல் நிகழ்ந்தது.

சமூக வலைதளங்களில் அதிக பின் தொடர்பவர்களை கொண்ட இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் பக்கங்களின் அட்மின்கள் சுமார் 70 பேர் இதில் பங்கேற்றனர். மேலும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு விதமான வதந்திகளும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளும் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அவற்றை தடுக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டன.



மேலும் இளைஞர்கள் அதிகமானோர் சமூக வலைதளங்களை பயன்படுத்தக்கூடிய சூழலில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுப்பது, சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற முக்கிய அம்சங்கள் இதில் பேசப்பட்டன.

எந்த ஒரு தகவலையும் உறுதிப்படுத்திக் கொள்ள சமூக வலைதளங்களில் போடும் போதும் மாவட்ட நிர்வாகத்தின் சமூக வலைதள கணக்குகளை TAG செய்யுமாறு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...