உடுமலையில் செண்டுமல்லி பூக்கள் விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை

செண்டுமல்லி பூ சாகுபடி குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்க வேண்டும். நாற்றுகள் உடுமலை பகுதியில் மானியத்தில் கிடைக்க வேளாண் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள புங்கமுத்தூர், தளி, பாப்பனூத்து, பெரியகோட்டை, ராஜாவூர் உட்பட பல்வேறு பகுதிகளில் ஆயுத பூஜை சீசனுக்காக கோழிகொண்டை, செண்டு மல்லி உட்பட பல்வேறு பூ சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சொட்டுநீர் பாசன முறையில் குறைந்த அளவு தண்ணீர் தேவை, சாகுபடி செலவு குறைவு, முகூர்த்த சீசனில் நல்ல விலை கிடைக்கும் என்ற அடிப்படையில் பரவலாக ஆண்டு முழுவதும் பகுதிகள் விவசாயிகள் சாகுபடிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, உடுமலை பகுதியில் செண்டு மல்லி சாகுபடிக்கு தேவையான நாற்றுகளை சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வாங்கி வருகின்றோம். ஏக்கருக்கு 12,000 நாற்றுகள் வரை நடவு செய்து 60 நாட்களில் பூ அறுவடையை துவக்கலாம். நடப்பு சீசனில் நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் உள்ளோம்.

பூ சாகுபடி குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்க வேண்டும் மற்றும் நாற்றுகள் உடுமலை பகுதியில் மானியத்தில் கிடைக்க வேளாண் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். விசேஷ நாட்களில் மட்டும் பூக்கள் அதிகளவு விற்பனையாகி வருகின்றது. விசேஷம் இல்லாத நாட்களில் பூக்கள் வாங்காமல் கருகும் அபாயம் உள்ளதால் அரசு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...