உடுமலையில் செண்டுமல்லி பூக்கள் விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை

செண்டுமல்லி பூ சாகுபடி குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்க வேண்டும். நாற்றுகள் உடுமலை பகுதியில் மானியத்தில் கிடைக்க வேளாண் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள புங்கமுத்தூர், தளி, பாப்பனூத்து, பெரியகோட்டை, ராஜாவூர் உட்பட பல்வேறு பகுதிகளில் ஆயுத பூஜை சீசனுக்காக கோழிகொண்டை, செண்டு மல்லி உட்பட பல்வேறு பூ சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சொட்டுநீர் பாசன முறையில் குறைந்த அளவு தண்ணீர் தேவை, சாகுபடி செலவு குறைவு, முகூர்த்த சீசனில் நல்ல விலை கிடைக்கும் என்ற அடிப்படையில் பரவலாக ஆண்டு முழுவதும் பகுதிகள் விவசாயிகள் சாகுபடிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, உடுமலை பகுதியில் செண்டு மல்லி சாகுபடிக்கு தேவையான நாற்றுகளை சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வாங்கி வருகின்றோம். ஏக்கருக்கு 12,000 நாற்றுகள் வரை நடவு செய்து 60 நாட்களில் பூ அறுவடையை துவக்கலாம். நடப்பு சீசனில் நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் உள்ளோம்.

பூ சாகுபடி குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்க வேண்டும் மற்றும் நாற்றுகள் உடுமலை பகுதியில் மானியத்தில் கிடைக்க வேளாண் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். விசேஷ நாட்களில் மட்டும் பூக்கள் அதிகளவு விற்பனையாகி வருகின்றது. விசேஷம் இல்லாத நாட்களில் பூக்கள் வாங்காமல் கருகும் அபாயம் உள்ளதால் அரசு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

Newsletter

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...