பொள்ளாச்சியில் திமுக சார்பில் குடுகுடுப்பைக்காரர் வேஷம் அணிந்து உடுக்கை அடித்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பு

இனி ஒரு முறை மோடி பிரதமராகும் பட்சத்தில் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் நாடாளுமன்ற உறுப்பினராக செல்வார் என்றும் குடுகுடுப்பைக்காரர் வேஷம் அணிந்து உடுக்கை அடித்து நபர் ஒருவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


கோவை: விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தற்போது கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு முறையும் தேர்தலின் போது கட்சிகள் புதுவிதமான தேர்தல் பிரச்சாரத்தை கையில் எடுப்பது வழக்கம்.

அதேபோல விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் பொள்ளாச்சியில் தொடங்கியுள்ளது.



திமுகவைச் சேர்ந்த தலைமை கழக பேச்சாளர் கோவிந்தன் என்பவர் குடுகுடுப்பைக்காரர் வேஷம் அணிந்து கையில் உடுக்கையோடு பொள்ளாச்சி நகர் பகுதி வீதிகளில் பொதுமக்களிடையே வாக்குகளை சேகரித்தார்.



பிரச்சாரத்தின் போது திமுக அரசு மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளதாகவும், கேஸ் விலையை உயர்த்தியது தான் மோடி செய்த ஒரே சாதனை என்றும், இனி ஒரு முறை அவர் பிரதமராகும் பட்சத்தில் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் நாடாளுமன்ற உறுப்பினராக செல்வார் என்றும் பிரச்சாரத்தின் போது அவர் பேசினார். இவருடன் பொள்ளாச்சி நகராட்சியின் 32வது வார்டு உறுப்பினர் பெருமாள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...