பொள்ளாச்சியில் திமுக சார்பில் குடுகுடுப்பைக்காரர் வேஷம் அணிந்து உடுக்கை அடித்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பு

இனி ஒரு முறை மோடி பிரதமராகும் பட்சத்தில் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் நாடாளுமன்ற உறுப்பினராக செல்வார் என்றும் குடுகுடுப்பைக்காரர் வேஷம் அணிந்து உடுக்கை அடித்து நபர் ஒருவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


கோவை: விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தற்போது கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு முறையும் தேர்தலின் போது கட்சிகள் புதுவிதமான தேர்தல் பிரச்சாரத்தை கையில் எடுப்பது வழக்கம்.

அதேபோல விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் பொள்ளாச்சியில் தொடங்கியுள்ளது.



திமுகவைச் சேர்ந்த தலைமை கழக பேச்சாளர் கோவிந்தன் என்பவர் குடுகுடுப்பைக்காரர் வேஷம் அணிந்து கையில் உடுக்கையோடு பொள்ளாச்சி நகர் பகுதி வீதிகளில் பொதுமக்களிடையே வாக்குகளை சேகரித்தார்.



பிரச்சாரத்தின் போது திமுக அரசு மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளதாகவும், கேஸ் விலையை உயர்த்தியது தான் மோடி செய்த ஒரே சாதனை என்றும், இனி ஒரு முறை அவர் பிரதமராகும் பட்சத்தில் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் நாடாளுமன்ற உறுப்பினராக செல்வார் என்றும் பிரச்சாரத்தின் போது அவர் பேசினார். இவருடன் பொள்ளாச்சி நகராட்சியின் 32வது வார்டு உறுப்பினர் பெருமாள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...