சென்னை ஆவடியில் நடைபெற்ற முய் தாய் எனும் பாக்சிங் போட்டியில் 15 பதக்கங்களை பெற்று கோவை மாணவர்கள் அசத்தல்

முய் தாய் எனும் பாக்சிங் போட்டியில் எட்டு தங்கம், ஏழு வெள்ளி என பதினைந்து பதக்கங்கள் வென்று மாணவர்கள் அசத்தியுள்ளனர். இதே போல இதில் இன்னொரு பிரிவான ப்ரோ பாக்சிங் போட்டியின் ஜூனியர் பிரிவில் தமிழகத்தில் முதன் முறையாக கோவையை சேர்ந்த நஃபீல் என்ற சிறுவன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.


கோவை: எலும்பு மூட்டுக்களின் கலையாக பார்க்கப்படும் முய் தாய் சண்டை கைமுட்டிகள், முழங்கைகள், முழங்கால்கள் மற்றும் தாடைகள் கொண்டு பாக்சிங் வகை போட்டியாக நடைபெறுகிறது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இந்த கலைகளை தற்போது மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கற்று வரும் நிலையில், மாநில, தேசிய அளவிலான போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.



இந்நிலையில் இந்திய மற்றும் தமிழ்நாடு முய் தாய் பாக்சிங் அமெச்சூர் சங்கத்தின் சார்பாக மூன்றாவது மாநில அளவிலான போட்டி அண்மையில் சென்னை ஆவடியில் நடைபெற்றது.

இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம், ஈரோடு என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். வயது, எடை, ஓபன் என பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் கோவை "ஆக்டகன் ஃபைட்ஸ்" கிளப்பை சேர்ந்த 15 பேர் கலந்து கொண்டனர்.



இதில் கலந்து கொண்ட அனைவரும் முறையே எட்டு தங்கம், ஏழு வெள்ளி என பதினைந்து பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர். இதே போல இதில் இன்னொரு பிரிவான ப்ரோ பாக்சிங் போட்டியின் ஜூனியர் பிரிவில் தமிழகத்தில் முதன் முறையாக கோவையை சேர்ந்த நஃபீல் என்ற சிறுவன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் கோவை திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர்கள், பயிற்சியாளர்கள், ஃபெரோஸ் பாபு, சபரி, சிக்கந்தர் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஒலிம்பிக்கில் பார்வையாளர்கள் போட்டியாக முய் தாய் நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டிகளை இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டாக அறிவிக்க வேண்டும் எனவும், குறிப்பாக தமிழகத்தில் பாக்சிங் போன்ற போட்டிகளுக்கு தனி அரங்கம் அமைந்துள்ளது போல் இந்த போட்டிகளுக்கும் அரங்கம் அமைத்து தர அரசு முன் வரவேண்டும் என பயிற்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...