சென்னை ஆவடியில் நடைபெற்ற முய் தாய் எனும் பாக்சிங் போட்டியில் 15 பதக்கங்களை பெற்று கோவை மாணவர்கள் அசத்தல்

முய் தாய் எனும் பாக்சிங் போட்டியில் எட்டு தங்கம், ஏழு வெள்ளி என பதினைந்து பதக்கங்கள் வென்று மாணவர்கள் அசத்தியுள்ளனர். இதே போல இதில் இன்னொரு பிரிவான ப்ரோ பாக்சிங் போட்டியின் ஜூனியர் பிரிவில் தமிழகத்தில் முதன் முறையாக கோவையை சேர்ந்த நஃபீல் என்ற சிறுவன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.


கோவை: எலும்பு மூட்டுக்களின் கலையாக பார்க்கப்படும் முய் தாய் சண்டை கைமுட்டிகள், முழங்கைகள், முழங்கால்கள் மற்றும் தாடைகள் கொண்டு பாக்சிங் வகை போட்டியாக நடைபெறுகிறது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இந்த கலைகளை தற்போது மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கற்று வரும் நிலையில், மாநில, தேசிய அளவிலான போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.



இந்நிலையில் இந்திய மற்றும் தமிழ்நாடு முய் தாய் பாக்சிங் அமெச்சூர் சங்கத்தின் சார்பாக மூன்றாவது மாநில அளவிலான போட்டி அண்மையில் சென்னை ஆவடியில் நடைபெற்றது.

இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம், ஈரோடு என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். வயது, எடை, ஓபன் என பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் கோவை "ஆக்டகன் ஃபைட்ஸ்" கிளப்பை சேர்ந்த 15 பேர் கலந்து கொண்டனர்.



இதில் கலந்து கொண்ட அனைவரும் முறையே எட்டு தங்கம், ஏழு வெள்ளி என பதினைந்து பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர். இதே போல இதில் இன்னொரு பிரிவான ப்ரோ பாக்சிங் போட்டியின் ஜூனியர் பிரிவில் தமிழகத்தில் முதன் முறையாக கோவையை சேர்ந்த நஃபீல் என்ற சிறுவன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் கோவை திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர்கள், பயிற்சியாளர்கள், ஃபெரோஸ் பாபு, சபரி, சிக்கந்தர் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஒலிம்பிக்கில் பார்வையாளர்கள் போட்டியாக முய் தாய் நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டிகளை இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டாக அறிவிக்க வேண்டும் எனவும், குறிப்பாக தமிழகத்தில் பாக்சிங் போன்ற போட்டிகளுக்கு தனி அரங்கம் அமைந்துள்ளது போல் இந்த போட்டிகளுக்கும் அரங்கம் அமைத்து தர அரசு முன் வரவேண்டும் என பயிற்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...