சென்னை ஆவடியில் நடைபெற்ற முய் தாய் எனும் பாக்சிங் போட்டியில் 15 பதக்கங்களை பெற்று கோவை மாணவர்கள் அசத்தல்

முய் தாய் எனும் பாக்சிங் போட்டியில் எட்டு தங்கம், ஏழு வெள்ளி என பதினைந்து பதக்கங்கள் வென்று மாணவர்கள் அசத்தியுள்ளனர். இதே போல இதில் இன்னொரு பிரிவான ப்ரோ பாக்சிங் போட்டியின் ஜூனியர் பிரிவில் தமிழகத்தில் முதன் முறையாக கோவையை சேர்ந்த நஃபீல் என்ற சிறுவன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.


கோவை: எலும்பு மூட்டுக்களின் கலையாக பார்க்கப்படும் முய் தாய் சண்டை கைமுட்டிகள், முழங்கைகள், முழங்கால்கள் மற்றும் தாடைகள் கொண்டு பாக்சிங் வகை போட்டியாக நடைபெறுகிறது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இந்த கலைகளை தற்போது மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கற்று வரும் நிலையில், மாநில, தேசிய அளவிலான போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.



இந்நிலையில் இந்திய மற்றும் தமிழ்நாடு முய் தாய் பாக்சிங் அமெச்சூர் சங்கத்தின் சார்பாக மூன்றாவது மாநில அளவிலான போட்டி அண்மையில் சென்னை ஆவடியில் நடைபெற்றது.

இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம், ஈரோடு என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். வயது, எடை, ஓபன் என பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் கோவை "ஆக்டகன் ஃபைட்ஸ்" கிளப்பை சேர்ந்த 15 பேர் கலந்து கொண்டனர்.



இதில் கலந்து கொண்ட அனைவரும் முறையே எட்டு தங்கம், ஏழு வெள்ளி என பதினைந்து பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர். இதே போல இதில் இன்னொரு பிரிவான ப்ரோ பாக்சிங் போட்டியின் ஜூனியர் பிரிவில் தமிழகத்தில் முதன் முறையாக கோவையை சேர்ந்த நஃபீல் என்ற சிறுவன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் கோவை திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர்கள், பயிற்சியாளர்கள், ஃபெரோஸ் பாபு, சபரி, சிக்கந்தர் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஒலிம்பிக்கில் பார்வையாளர்கள் போட்டியாக முய் தாய் நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டிகளை இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டாக அறிவிக்க வேண்டும் எனவும், குறிப்பாக தமிழகத்தில் பாக்சிங் போன்ற போட்டிகளுக்கு தனி அரங்கம் அமைந்துள்ளது போல் இந்த போட்டிகளுக்கும் அரங்கம் அமைத்து தர அரசு முன் வரவேண்டும் என பயிற்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...