பொள்ளாச்சி பல்லடம் சாலை கரப்பாடி பிரிவில் நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி-பல்லடம் சாலை கரப்பாடி பிரிவில் அருகே சாலையில் நெடுஞ்சாலைத் துறையினர் கொட்டி வைத்துள்ள ஜல்லி கற்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டி வந்த ஓட்டுநர் மணிகண்டன் பூபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள சடையக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டபூபதி. ஆட்டோ ஓட்டுனரான இவர் இன்று அதிகாலை பயணிகளை ஏற்றுக் கொண்டு பொள்ளாச்சி பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு மீண்டும் சடையக்கவுண்டனூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பொள்ளாச்சி-பல்லடம் சாலை கரப்பாடி பிரிவில் அருகே சாலையில் நெடுஞ்சாலைத் துறையினர் கொட்டி வைத்துள்ள ஜல்லி கற்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஆட்டோ ஓட்டி வந்த ஓட்டுநர் மணிகண்டன் பூபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் ஆட்டோ ஓட்டுனரின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே நெடுஞ்சாலை துறையினர் அலட்சியத்தால் சாலையில் கொட்டி வைத்த ஜல்லிகற்கள் மீது ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி ஓட்டுனர் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதால், நெடுஞ்சாலைத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொள்ளாச்சி பல்லடம் சாலை கரப்பாடி பிரிவில் ஆட்டோ ஓட்டுனர்களும், பொதுமக்களும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லி கற்களை அகற்றப்பட்டு இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததையடுத்து மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...