பொள்ளாச்சி பல்லடம் சாலை கரப்பாடி பிரிவில் நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி-பல்லடம் சாலை கரப்பாடி பிரிவில் அருகே சாலையில் நெடுஞ்சாலைத் துறையினர் கொட்டி வைத்துள்ள ஜல்லி கற்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டி வந்த ஓட்டுநர் மணிகண்டன் பூபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள சடையக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டபூபதி. ஆட்டோ ஓட்டுனரான இவர் இன்று அதிகாலை பயணிகளை ஏற்றுக் கொண்டு பொள்ளாச்சி பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு மீண்டும் சடையக்கவுண்டனூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பொள்ளாச்சி-பல்லடம் சாலை கரப்பாடி பிரிவில் அருகே சாலையில் நெடுஞ்சாலைத் துறையினர் கொட்டி வைத்துள்ள ஜல்லி கற்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஆட்டோ ஓட்டி வந்த ஓட்டுநர் மணிகண்டன் பூபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் ஆட்டோ ஓட்டுனரின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே நெடுஞ்சாலை துறையினர் அலட்சியத்தால் சாலையில் கொட்டி வைத்த ஜல்லிகற்கள் மீது ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி ஓட்டுனர் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதால், நெடுஞ்சாலைத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொள்ளாச்சி பல்லடம் சாலை கரப்பாடி பிரிவில் ஆட்டோ ஓட்டுனர்களும், பொதுமக்களும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லி கற்களை அகற்றப்பட்டு இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததையடுத்து மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...