வணிகவரி நிலுவைத் தொகை தள்ளுபடி - கோவை மாவட்ட வர்த்தக சங்கம் வரவேற்பு

வணிகவரி நிலுவை தள்ளுபடி செய்த தமிழக முதல்வருக்கு கோவை மாவட்ட வர்த்தக சங்கம் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளது


கோவை: கடன் தள்ளுபடியோடு நிலுவைத் தொகைகளையும் தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வர்த்தகர்கள் கோரிக்கை.

50 ஆயிரத்திற்கும் கீழான வணிகவரி நிலவை தள்ளுபடி சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார் இந்த அறிவிப்பின்படி தமிழக வணிகர்கள் வணிகவரித்துறை இடையிலான பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஒரு 50 ஆயிரத்துக்கும் குறைவான வரி வட்டி அபராதம் செலுத்த வேண்டியவர்களுக்கு நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்து 95 ஆயிரத்து 52 சிறு வணிகர்கள் நிலுவைத் தொகையானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.



இந்த செய்தியை அறிந்த கோவை மாவட்ட வர்த்தக சங்கம் வணிகர்களின் நிலவைத் தொகையை தள்ளுபடி செய்ததற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வர்த்தக சங்க கோவை தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.



இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வர்த்தக சங்க தலைவர் முத்துப்பாண்டி பேசும்போது கடந்த மே ஐந்தாம் தேதி சூலூரில் நடைபெற்ற வணிகர்கள் தினத்தில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார் அப்போது எங்கள் சங்கத்தின் சார்பில் வணிகவரி நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி இருந்தோம் அந்த தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவிடம் கொடுத்து தமிழக முதல்வரிடம் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அளித்திருந்தோம்.

ஐந்து மாதத்திற்கு உள்ளாக இந்த நிலுவைத் தொகையானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது இது எங்கள் சங்கத்துக்கு கிடைத்த வெற்றி இதனை வரவேற்கிறோம் என தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...