வணிகவரி நிலுவைத் தொகை தள்ளுபடி - கோவை மாவட்ட வர்த்தக சங்கம் வரவேற்பு

வணிகவரி நிலுவை தள்ளுபடி செய்த தமிழக முதல்வருக்கு கோவை மாவட்ட வர்த்தக சங்கம் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளது


கோவை: கடன் தள்ளுபடியோடு நிலுவைத் தொகைகளையும் தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வர்த்தகர்கள் கோரிக்கை.

50 ஆயிரத்திற்கும் கீழான வணிகவரி நிலவை தள்ளுபடி சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார் இந்த அறிவிப்பின்படி தமிழக வணிகர்கள் வணிகவரித்துறை இடையிலான பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஒரு 50 ஆயிரத்துக்கும் குறைவான வரி வட்டி அபராதம் செலுத்த வேண்டியவர்களுக்கு நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்து 95 ஆயிரத்து 52 சிறு வணிகர்கள் நிலுவைத் தொகையானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.



இந்த செய்தியை அறிந்த கோவை மாவட்ட வர்த்தக சங்கம் வணிகர்களின் நிலவைத் தொகையை தள்ளுபடி செய்ததற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வர்த்தக சங்க கோவை தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.



இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வர்த்தக சங்க தலைவர் முத்துப்பாண்டி பேசும்போது கடந்த மே ஐந்தாம் தேதி சூலூரில் நடைபெற்ற வணிகர்கள் தினத்தில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார் அப்போது எங்கள் சங்கத்தின் சார்பில் வணிகவரி நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி இருந்தோம் அந்த தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவிடம் கொடுத்து தமிழக முதல்வரிடம் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அளித்திருந்தோம்.

ஐந்து மாதத்திற்கு உள்ளாக இந்த நிலுவைத் தொகையானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது இது எங்கள் சங்கத்துக்கு கிடைத்த வெற்றி இதனை வரவேற்கிறோம் என தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...