கோவை வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விலையில்லா மரக்கன்றுகள்!

கோவை மாவட்ட வனத்துறை சார்பில், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்‌ கீழ்‌ கோவை மாவட்ட மக்களுக்கு மரநாற்றுகள், தேக்கு, சவுக்கு, புளியன், புங்கன், நெல்லி உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை 2023-24ஆம்‌ ஆண்டில்‌ நடவு செய்வதற்காக மரக்கன்றுகள்‌ விலையில்லாமல்‌ வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்ட மக்களுக்கு வனத்துறை சார்பில் விலையில்லா மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின்‌ பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்‌ கீழ்‌ கோவை மாவட்ட வனத்துறையின்‌ மூலம்‌, கோவை வனவியல்‌ விரிவாக்க கோட்டத்தின்‌ சார்பில்‌ 2023-24ஆம்‌ ஆண்டில்‌ நடவு செய்வதற்காக மரக்கன்றுகள்‌ விலையில்லாமல்‌ வழங்கப்படவுள்ளது.

இதன் மூலம் பொதுமக்களுக்கு மரநாற்றுகள், தேக்கு, சவுக்கு, புளியன், புங்கன், நெல்லி உள்பட பல்வேறு இன மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. அதன்படி, கோவை வனவியல்‌ விரிவாக்க கோட்டத்‌தின்‌, விளம்பர சரகம்‌ ॥-ன்‌ மூலம்‌ கோவை, மத்தம்பாளையம்‌ பகுதியில்‌ உள்ள நாற்றங்கால்‌ மூலம்‌ மரக்கன்றுகள்‌ உற்பத்தி செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஆர்வமுள்ளவர்கள்‌ நேரிலோ அல்லது கைப்பேசிவாயிலாகவோ தகவல்களை கேட்டு, விலையில்லா மரக்கன்றுகளை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்‌.

மேலும் தொடர்புக்கு

வனவியல் விரிவாக்க அலுவலர்,

வனவியல் விரிவாக்க கோட்டம்,

கோவை - 641043

வனச்சரக அலுவலர் / விளம்பர அலுவலர்

விளம்பர சரகம் - II

கோவை

தொலை பேசி எண்கள்: 8667266884, 8220151817

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...