கோவை வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விலையில்லா மரக்கன்றுகள்!

கோவை மாவட்ட வனத்துறை சார்பில், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்‌ கீழ்‌ கோவை மாவட்ட மக்களுக்கு மரநாற்றுகள், தேக்கு, சவுக்கு, புளியன், புங்கன், நெல்லி உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை 2023-24ஆம்‌ ஆண்டில்‌ நடவு செய்வதற்காக மரக்கன்றுகள்‌ விலையில்லாமல்‌ வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்ட மக்களுக்கு வனத்துறை சார்பில் விலையில்லா மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின்‌ பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்‌ கீழ்‌ கோவை மாவட்ட வனத்துறையின்‌ மூலம்‌, கோவை வனவியல்‌ விரிவாக்க கோட்டத்தின்‌ சார்பில்‌ 2023-24ஆம்‌ ஆண்டில்‌ நடவு செய்வதற்காக மரக்கன்றுகள்‌ விலையில்லாமல்‌ வழங்கப்படவுள்ளது.

இதன் மூலம் பொதுமக்களுக்கு மரநாற்றுகள், தேக்கு, சவுக்கு, புளியன், புங்கன், நெல்லி உள்பட பல்வேறு இன மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. அதன்படி, கோவை வனவியல்‌ விரிவாக்க கோட்டத்‌தின்‌, விளம்பர சரகம்‌ ॥-ன்‌ மூலம்‌ கோவை, மத்தம்பாளையம்‌ பகுதியில்‌ உள்ள நாற்றங்கால்‌ மூலம்‌ மரக்கன்றுகள்‌ உற்பத்தி செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஆர்வமுள்ளவர்கள்‌ நேரிலோ அல்லது கைப்பேசிவாயிலாகவோ தகவல்களை கேட்டு, விலையில்லா மரக்கன்றுகளை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்‌.

மேலும் தொடர்புக்கு

வனவியல் விரிவாக்க அலுவலர்,

வனவியல் விரிவாக்க கோட்டம்,

கோவை - 641043

வனச்சரக அலுவலர் / விளம்பர அலுவலர்

விளம்பர சரகம் - II

கோவை

தொலை பேசி எண்கள்: 8667266884, 8220151817

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...