உடுமலை அருகே ஆட்சியர் வாகனத்தை மறித்து தகராறு - 8 பேருக்கு தலா 13 மாதங்கள் சிறை!

கடந்த 2016ஆம் ஆண்டு உடுமலை அருகே மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை மறித்து தகராறில் ஈடுபட்ட செந்தில்குமார், விஜயசேகரன், சந்திரசேகரன், அருள்பிரகாஷ், சபாபதி, தங்கவேல், சண்முகசுந்தரம் உள்ளிட்ட 8 பேருக்கு தலா 13 மாதம் சிறை மற்றும் ரூ.1,500 அபராதம் விதித்து உடூமலை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கடந்த 2016ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை மறித்து தகராறில் ஈடுபட்ட 8 பேருக்கு தலா 13மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து உடுமலை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உடுமலை அடுத்த பெரியபாப்பனூத்து பகுதியில் கடந்த 13.07.2016 அன்று மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி தலைமையில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.

முகாம் முடிந்ததும் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி காரில் அங்கிருந்து புறப்பட்டார். அப்போது வாளவாடியைச் சேர்ந்த செந்தில்குமார், விஜயசேகரன், சந்திரசேகரன், வேலூரைச் சேர்ந்த அருள்பிரகாஷ், பூலாங்கிணரைச் சேர்ந்த விஜயசேகரன், சின்ன பாப்பனூத்தைச் சேர்ந்த சபாபதி, தங்கவேல், சின்ன பொம்மன் சாலையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் ஆகியோர் காரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பெரியபாப்பனூத்து கிராம நிர்வாக அதிகாரி பால்வாசகம் தளி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் இவர்கள் 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து இவர்கள் மீதான வழக்கு உடுமலை முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அதன்பின்னர் இந்த வழக்கு 2வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை மாஜிஸ்திரேட்டு மீனாட்சி விசாரித்து வந்தார். அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஜெயந்தி ஆஜராகி வழக்கை நடத்தி வந்தார்.

வழக்கு விசாரணை முடிந்து விட்ட நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட செந்தில்குமார், விஜயசேகரன், சந்திரசேகரன், அருள்பிரகாஷ், விஜயசேகரன், சபாபதி, தங்கவேல், சண்முகசுந்தரம் ஆகியோருக்கு தலா ஒரு வருடம் ஒரு மாதம் சிறை தண்டனையும், தலா ரூ.1,500 அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...