உடுமலை அருகே ஆட்சியர் வாகனத்தை மறித்து தகராறு - 8 பேருக்கு தலா 13 மாதங்கள் சிறை!

கடந்த 2016ஆம் ஆண்டு உடுமலை அருகே மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை மறித்து தகராறில் ஈடுபட்ட செந்தில்குமார், விஜயசேகரன், சந்திரசேகரன், அருள்பிரகாஷ், சபாபதி, தங்கவேல், சண்முகசுந்தரம் உள்ளிட்ட 8 பேருக்கு தலா 13 மாதம் சிறை மற்றும் ரூ.1,500 அபராதம் விதித்து உடூமலை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கடந்த 2016ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை மறித்து தகராறில் ஈடுபட்ட 8 பேருக்கு தலா 13மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து உடுமலை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உடுமலை அடுத்த பெரியபாப்பனூத்து பகுதியில் கடந்த 13.07.2016 அன்று மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி தலைமையில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.

முகாம் முடிந்ததும் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி காரில் அங்கிருந்து புறப்பட்டார். அப்போது வாளவாடியைச் சேர்ந்த செந்தில்குமார், விஜயசேகரன், சந்திரசேகரன், வேலூரைச் சேர்ந்த அருள்பிரகாஷ், பூலாங்கிணரைச் சேர்ந்த விஜயசேகரன், சின்ன பாப்பனூத்தைச் சேர்ந்த சபாபதி, தங்கவேல், சின்ன பொம்மன் சாலையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் ஆகியோர் காரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பெரியபாப்பனூத்து கிராம நிர்வாக அதிகாரி பால்வாசகம் தளி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் இவர்கள் 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து இவர்கள் மீதான வழக்கு உடுமலை முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அதன்பின்னர் இந்த வழக்கு 2வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை மாஜிஸ்திரேட்டு மீனாட்சி விசாரித்து வந்தார். அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஜெயந்தி ஆஜராகி வழக்கை நடத்தி வந்தார்.

வழக்கு விசாரணை முடிந்து விட்ட நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட செந்தில்குமார், விஜயசேகரன், சந்திரசேகரன், அருள்பிரகாஷ், விஜயசேகரன், சபாபதி, தங்கவேல், சண்முகசுந்தரம் ஆகியோருக்கு தலா ஒரு வருடம் ஒரு மாதம் சிறை தண்டனையும், தலா ரூ.1,500 அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...