கோவை ஒண்டிபுதூர் அரசு மகளிர் காப்பகத்தில் ஆள்கடத்தல் குறித்து பெண்களுக்கு சட்ட விழிப்புணர்வு!

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஒண்டிப்புதூரில் உள்ள மகளிர் காப்பகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில், சார்பு நிதிபதி K.S.S.சிவா பங்கேற்று ஆள்கடத்தல் குறித்து பெண்களிடையே ஆள்கடத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


கோவை: கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரில் உள்ள மகளிர் காப்பகத்தில், சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஆட்கடத்தல் குறித்த சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் அமைந்துள்ள அரசு மகளிர் காப்பகத்தில் ஆள்கடத்தல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த குழுவின் கோவை மாவட்ட செயலாளரும், சார்பு நீதிபதியுமான K.S.S.சிவா, மகளிர் காப்பகத்தில் உள்ள பெண்களிடையே ஆள் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் அந்த காப்பகத்தில் தேவையான வசதிகள் உரிய முறையில் வழங்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் மகளிர் காப்பக கண்காணிப்பாளர் சிவகாமி மற்றும் காப்பக ஊழியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...