கோவை ஒண்டிபுதூர் அரசு மகளிர் காப்பகத்தில் ஆள்கடத்தல் குறித்து பெண்களுக்கு சட்ட விழிப்புணர்வு!

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஒண்டிப்புதூரில் உள்ள மகளிர் காப்பகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில், சார்பு நிதிபதி K.S.S.சிவா பங்கேற்று ஆள்கடத்தல் குறித்து பெண்களிடையே ஆள்கடத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


கோவை: கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரில் உள்ள மகளிர் காப்பகத்தில், சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஆட்கடத்தல் குறித்த சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் அமைந்துள்ள அரசு மகளிர் காப்பகத்தில் ஆள்கடத்தல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த குழுவின் கோவை மாவட்ட செயலாளரும், சார்பு நீதிபதியுமான K.S.S.சிவா, மகளிர் காப்பகத்தில் உள்ள பெண்களிடையே ஆள் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் அந்த காப்பகத்தில் தேவையான வசதிகள் உரிய முறையில் வழங்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் மகளிர் காப்பக கண்காணிப்பாளர் சிவகாமி மற்றும் காப்பக ஊழியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...