கோவையில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி - சிகிச்சை பலனின்றி பெண் பலி!

கோவை சின்னியம்பாளையத்தில் தனியார் லாட்ஜில் தங்கி இருந்த கிருஷ்ணன் - கிருத்திகா இருவரும் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். இதில் கிருத்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



கோவை: நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருத்திகா (வயது 26). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் கிருத்திகா கடந்த 2 ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்தார். அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் (வயது29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த நட்பு கள்ளக்காதலாக மாறியது.

இதனையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 5 நாட்களுக்கு முன்பு கோயமுத்தூர் வந்தனர். கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறைத்து எடுத்து தங்கினர். அங்கு 2 பேரும் எலி மருந்து குடித்தனர். வாடகை கேட்க சென்ற தங்கும் விடுதி ஊழியர்கள், இதைப் பார்த்து 2 பேரையும் மீட்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு கிருத்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...