வால்பாறை அருகே பழங்குடியின கிராமத்தில் சார் ஆட்சியர் தலைமையில் கிராம சபை கூட்டம்

கோவை வால்பாறை அருகேயுள்ள பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், சாலை, மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை விடுத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி வன சரகத்தில் சுமார் 8 பழங்குடியின மக்கள் வாழும் கிராமம் உள்ளது. கிராமத்தில் ஒவ்வொரு மாதமும் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

இதேபோல் இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா தலைமையில் வால்பாறை வனச்சரகத்தில் பழங்குடியின கிராமத்திலும் மற்றும் மானாம்பள்ளி வன சரகத்தில் சின்கோனா பழங்குடி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



இதில், பயிற்சி சார் ஆட்சியர்கள் மற்றும் தனி வட்டாட்சியர் ஜெகதீஷ் மற்றும் பழங்குடியினர் வட்டாசியர் தணிகைவேல், வனத்துறை அதிகாரி மணிகண்டன் வெங்கடேஷ் மற்றும் 21 வார்டு உறுப்பினர் உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் ஆதிவாசி மக்கள் கிராமத்தில் உள்ள பிரச்சனைகளை மக்கள் சார் ஆட்சியரிடம் தெரிவித்தனர். வீடுகளுக்கு மின்சார வசதி வேண்டும். சாலை வசதி வேண்டும். குடிதண்ணீர் வசதி வேண்டும்.



சிங்கோனா பகுதியில் வனப்பகுதியில் சேகரிக்கும் தேன், மிளகு, காப்பி, ஏலக்காய் போன்ற பயிர்களை விற்பனை செய்ய விற்பனை கூடம் வேண்டும். குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் போன்றவை வேண்டும் என்று சார் ஆட்சியரிடம் தெரிவித்தனர்.



இதுபோன்ற பழங்குடி கிராமத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்த மனுவை சார் ஆட்சியரிடம் வழங்கினர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...