வால்பாறை அருகே பழங்குடியின கிராமத்தில் சார் ஆட்சியர் தலைமையில் கிராம சபை கூட்டம்

கோவை வால்பாறை அருகேயுள்ள பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், சாலை, மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை விடுத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி வன சரகத்தில் சுமார் 8 பழங்குடியின மக்கள் வாழும் கிராமம் உள்ளது. கிராமத்தில் ஒவ்வொரு மாதமும் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

இதேபோல் இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா தலைமையில் வால்பாறை வனச்சரகத்தில் பழங்குடியின கிராமத்திலும் மற்றும் மானாம்பள்ளி வன சரகத்தில் சின்கோனா பழங்குடி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



இதில், பயிற்சி சார் ஆட்சியர்கள் மற்றும் தனி வட்டாட்சியர் ஜெகதீஷ் மற்றும் பழங்குடியினர் வட்டாசியர் தணிகைவேல், வனத்துறை அதிகாரி மணிகண்டன் வெங்கடேஷ் மற்றும் 21 வார்டு உறுப்பினர் உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் ஆதிவாசி மக்கள் கிராமத்தில் உள்ள பிரச்சனைகளை மக்கள் சார் ஆட்சியரிடம் தெரிவித்தனர். வீடுகளுக்கு மின்சார வசதி வேண்டும். சாலை வசதி வேண்டும். குடிதண்ணீர் வசதி வேண்டும்.



சிங்கோனா பகுதியில் வனப்பகுதியில் சேகரிக்கும் தேன், மிளகு, காப்பி, ஏலக்காய் போன்ற பயிர்களை விற்பனை செய்ய விற்பனை கூடம் வேண்டும். குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் போன்றவை வேண்டும் என்று சார் ஆட்சியரிடம் தெரிவித்தனர்.



இதுபோன்ற பழங்குடி கிராமத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்த மனுவை சார் ஆட்சியரிடம் வழங்கினர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...