உடுமலை அருகே இரண்டு டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் பலியான சோகம்!

உடுமலை அடுத்த மானுப்பட்டி அருகே நடைபெற்று வரும் நெடுஞ்சாலை பணிக்காக மண் எடுத்துச் சென்ற இரண்டு டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியான நிலையில் மற்றொருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இரண்டு டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலை - மூணார் செல்லும் பாதையில் மானுப்பட்டி அருகேயுள்ள கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிக்காகவனப்பகுதியில்இருந்து டிப்பர் லாரிகள் மூலம் மண் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. சுமார் 50 க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் மூலம் இரவு பகலாக மண் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மண் ஏற்று செல்லும் கனரக வாகனங்களால் இந்த பகுதியில் இதுவரை 10க்கும் மேற்பட்ட விபத்துகள் நிகழ்ந்து இருப்பதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில் இன்று அதிகாலையில் மானுப்பட்டி பகுதியில் இரண்டு டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



தனிடையே மண் ஏற்றிச்செல்லும் டிப்பர் லாரிகள் மூலம் அதிகப்படியான விபத்துக்கள் நிகழ்ந்து வரும் நிலையில் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

டிப்பர் லாரி ஓட்டுனராக உள்ள வட மாநிலத்தை சாா்ந்த இளைஞர்கள் இரவு நேரங்களில் மது போதையில் ஓட்டுவதாலும் வாகனங்களில் போதிய எச்சரிக்கை விளக்குகள் இல்லாததாலும் விபத்து ஏற்படுகிறது என கூறப்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் இதனை தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...