உடுமலை அருகே இரண்டு டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் பலியான சோகம்!

உடுமலை அடுத்த மானுப்பட்டி அருகே நடைபெற்று வரும் நெடுஞ்சாலை பணிக்காக மண் எடுத்துச் சென்ற இரண்டு டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியான நிலையில் மற்றொருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இரண்டு டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலை - மூணார் செல்லும் பாதையில் மானுப்பட்டி அருகேயுள்ள கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிக்காகவனப்பகுதியில்இருந்து டிப்பர் லாரிகள் மூலம் மண் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. சுமார் 50 க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் மூலம் இரவு பகலாக மண் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மண் ஏற்று செல்லும் கனரக வாகனங்களால் இந்த பகுதியில் இதுவரை 10க்கும் மேற்பட்ட விபத்துகள் நிகழ்ந்து இருப்பதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில் இன்று அதிகாலையில் மானுப்பட்டி பகுதியில் இரண்டு டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



தனிடையே மண் ஏற்றிச்செல்லும் டிப்பர் லாரிகள் மூலம் அதிகப்படியான விபத்துக்கள் நிகழ்ந்து வரும் நிலையில் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

டிப்பர் லாரி ஓட்டுனராக உள்ள வட மாநிலத்தை சாா்ந்த இளைஞர்கள் இரவு நேரங்களில் மது போதையில் ஓட்டுவதாலும் வாகனங்களில் போதிய எச்சரிக்கை விளக்குகள் இல்லாததாலும் விபத்து ஏற்படுகிறது என கூறப்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் இதனை தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...